Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

Prasanth Karthick
சனி, 11 ஜனவரி 2025 (13:48 IST)

குஜராத்தில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாரடைப்பு வந்து பள்ளியிலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த காலங்களில் வயதானவர்களுக்கு மட்டுமே இருந்து வந்த சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் தற்போது குழந்தைகளுக்கும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீப காலங்களில் இளைஞர்களே பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் குஜராத்தில் 3வது படிக்கு சிறுமி மாரடைப்பால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கார்கி ரன்பரா அங்குள்ள தல்தேஜ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். காலை எல்லா குழந்தைகளை போலவே பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
 

ALSO READ: அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

 

உடல் அசௌகர்யத்தை உணர்ந்த சிறுமி அருகில் உள்ள சேரில் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சிறுமி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி மாரடைப்பால் பலியான வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments