Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடம்பாக்கத்தில் ரயில் மோதி இருவர் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (08:18 IST)
ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து இன்னொரு பிளாட்பாரம் செல்ல அதற்கென இருக்கும் வழிகளில் செல்லாமல் ஒருசில பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரயில் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை அவ்வப்போது விழிப்புணர்வை பயணிகளுக்கு ஏற்படுத்தி வந்தபோதிலும் ஒருசில நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு பேர் எதிர்பாராத வகையில் ரயில் மோதி உயிரிழந்ததாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில் ரயில் மோதி உயிரிழந்தவர்களில் ஒருவர் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்துள்ளது. இன்னொருவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments