Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் திடீரென உருவான பள்ளம்; அதிர்ச்சியடைந்த மக்கள்

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (16:41 IST)
சென்னையில் 15 அடி ஆழத்துக்கு திடீரென சாலையில் ஒரு பள்ளம் உருவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள சாந்தி காலணியில், இன்று காலை திடீரென 15 அடிக்கு பள்ளம் உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாகனங்களை வேறு பாதைகளில் திருப்பி விட்டனர். பின்பு இரும்புகளை பள்ளத்தை சுற்றி தடுப்புகளாக வைத்தனர்.

கழிவு நீர் கால்வாயால் பள்ளம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தில் இருந்த கழிவுநீரை வெளியேற்றி பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பள்ளம் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments