Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடை திறந்த இரண்டே நாட்களை கடையை காலி செய்த திருடர்கள்: கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (17:39 IST)
கள்ளக்குறிச்சி அருகே நகை கடை திறந்த இரண்டே நாட்களில் அந்த கடையில் இருந்த அனைத்து நகைகளையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கள்ளகுறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புத்தூர் என்ற கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நகைக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இந்த நகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்த 281 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் 
 
மேலும் அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்த வயர்களையும் துண்டித்து உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
நகைக்கடை திறந்த இரண்டே நாட்களில் அந்த கடை முழுவதிலும் உள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments