Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் பணத்தோடு எஸ்கேப் ஆன டிரைவர் கைது!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (18:11 IST)
சென்னையில் ஏடிஎம்-ல் பணம் நிரப்ப வந்தபோது பணத்தோடு வணியை எடுத்துக்கொண்டு தப்பிட டிரைவர் மன்னார்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனம் 87 லட்ச ரூபாய் பணத்துடன் 3 நபர்களையும் ஏடிஎம்-ல் பணம் நிரப்ப அனுப்பி வைத்தது. 5 ஏடிஎம்-களில் பணம் நிரப்பிய பிறகு வேளச்சேரி விஜயா பேங்க் ஏடிஎம்-ல் பணம் நிரப்ப சென்றனர். மூன்று அலுவலர்களும் ஏடிஎம்-க்குள் இருந்த நேரம் பார்த்து வண்டியில் இருந்த 52 லட்சத்துடன் தப்பினார் டிரைவர் அம்புரோஸ்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக அவரை தேடும் பணியை துரிதப்படுத்தினர். இந்நிலையில் கொருக்கு பேட்டை அருகே அம்புரோஸ் ஓட்டி சென்ற ஏடிஎம் வாகனம் கிடந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அம்புரோஸ் உறவினர் வீட்டில் 32 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது. மீதமுள்ள 20 லட்சம் பணத்தோடு தப்பி சென்ற அம்புரோஸை மன்னார்குடியில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

இன்றும் இறங்கிய தங்கம் விலை.. ஆனாலும் 9000ஐ விட கீழே வரவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments