Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாட்பாரத்தில் மாற்றுத்திறனாளி பெண் கற்பழிப்பு: சென்னையில் பயங்கரம்

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (13:13 IST)
சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்ணை ஒரு காமக்கொடூரன் கற்பழித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் மணிகண்டன் - விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர். விஜயலட்சுமி ஒரு விபத்தில் கண் பார்வையை இழந்தவர் ஆவார்.
 
இந்நிலையில் நேற்று தம்பதியினர் இருவரும் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மனித மிருகம் ஒன்று, மாற்றுத்திறனாளி பெண் என்றும் பாராமல் விஜயலட்சுமியை கற்பழிக்க முயன்றுள்ளான். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனையும் அந்த மனித மிருகம் கடுமையாக தாக்கியுள்ளது.
 
பின்னர் விஜயலட்சுமியை ஒரு முட்புதரினுள் வைத்து சீரழித்துள்ளான் அந்த காமக்கொடூரன். இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
மனைவியை இழந்த விஜயகுமார், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈவு இரக்கமின்றி இந்த கொடூரத்தை செய்த அயோக்கியனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மணிகண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments