Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசி கறி கேட்டு அராஜகம் செய்த போலீஸ்காரர்: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (10:39 IST)
சேலத்தில் இலவசமாக கறி தராத ஆத்திரத்தில் போலீஸ்காரர் ஒருவர் கறிக்கடைகாரரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த மூக்குத்தி கவுண்டர் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். அவ்வப்போது அவரது மனைவியும் மகனும் கடையை கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று மூக்குத்தி கவுண்டர் கடைக்கு வந்த காவல் அதிகாரி ஒருவர், அவரிடம் இலவசமாக கறி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஃப்ரீயால்லாம் தர முடியாது காசு கொடுங்கள் தருகிறேன் என மூக்குத்தி கவுண்டர் கூறியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த காவலர் பாலசுப்ரமணியம், மூக்குத்தி கவுண்டரின் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
 
இதனையடுத்து மூக்குத்தி கவுண்டர் தனக்கு நேர்ந்த அவலங்களை மாவட்ட காவல் ஆணையரிடம் கூறினார். உடனடியாக காவலர் பாலசுப்ரமணியம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும் மூக்குத்தி கவுண்டரிடம் சென்ற காவலர் பாலசுப்ரமணியம், அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments