Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார் கைது

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (13:22 IST)
இங்கிலாந்தைப் சேர்ந்த பாதிரியார், பள்ளி மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் ராபின்சன்(75) என்ற பாதிரியார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு,  ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய  மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்.
 
இந்நிலையில் 2011-ம் ஆண்டில் பாதிரியார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக காப்பகத்தில் தங்கியிருந்த 16 வயது மாணவன் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் பாதிரியார் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
 
வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments