Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவி

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (08:21 IST)
நாமக்கல்லில் சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் ஏ.எஸ் பேட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. செல்வராஜ் பைனாஸ் தொழில் நடத்தி வருகிறார். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால், அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சொத்து அனைத்தையும் தன் பெயரில் எழுதி வைக்கும்படி ராஜேஸ்வரி கூறியதால் தான் இருவருக்கும் இடையே தகராறு என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜை கடத்தி சொத்து அனைத்தையும் ராஜேஸ்வரிக்கு மாற்றும்படி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த செல்வராஜ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக அந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், ராஜேஸ்வரி தான் இப்படி செய்ய சொன்னார் என கூறினர்.
இதனையடுத்து போலீஸார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். விஷயமறிந்து தலைமறைவான ராஜேஸ்வரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments