Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவி

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (08:21 IST)
நாமக்கல்லில் சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் ஏ.எஸ் பேட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. செல்வராஜ் பைனாஸ் தொழில் நடத்தி வருகிறார். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால், அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சொத்து அனைத்தையும் தன் பெயரில் எழுதி வைக்கும்படி ராஜேஸ்வரி கூறியதால் தான் இருவருக்கும் இடையே தகராறு என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜை கடத்தி சொத்து அனைத்தையும் ராஜேஸ்வரிக்கு மாற்றும்படி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த செல்வராஜ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக அந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், ராஜேஸ்வரி தான் இப்படி செய்ய சொன்னார் என கூறினர்.
இதனையடுத்து போலீஸார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். விஷயமறிந்து தலைமறைவான ராஜேஸ்வரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments