Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் நாள் கொண்டாட்டம் - பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபர் கைது

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (11:13 IST)
சென்னையில் வாலிபர் ஒருவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). சதீஷ் மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சதீஷின் பிறந்தநாளன்று, நள்ளிரவு அவரது நண்பர்கள், கேக்குடன் சதீஷ் வீட்டிற்கு சென்றனர்.
 
பின்னர் வீட்டிற்கு வெளியே ரோட்டில் கேக் வெட்ட திட்டிமிட்டு, சதீஷின் நண்பர்கள் அவரை பட்டாக்கத்தியால் கேக் வெட்ட கூறினர். அவரும் அவ்வாறே செய்தார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். 
 
இந்த வீடியோவை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் சதீஷை கைது செய்தனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் சதீஷ் செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments