Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மியால் ரூ.1 கோடி இழந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் !

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (16:59 IST)
ராசிபுரம் அருகில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.1 கோடி இழந்த நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும்  நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளைய என்ற பகுதியில் வசித்து வருபவர் விஜய்(33). இவர் பிகாம் படித்துள்ள நிலையில்,தன் தந்தையுடன் இணைந்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த விஜய், இதில், ரூ. 1 கோடி இழந்துள்ளார்.

பணத்தை இழந்த வேதனையில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்று  நேற்று முன் தினம் ஒரு வீடியோவை தன் நண்பர்களுக்கு தன் மரணம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர், அவரது நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூஞ்ச் எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்.! அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா?

ரூ.1.5 கோடி ரொக்கம்.. 1 கிலோ தங்கம்.. 1.5 கிலோ வெள்ளி.. மாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த வரதட்சணை..!

இந்தியா நடத்தியது பழிக்குப்பழி தாக்குதல்; பேசித் தீர்க்க முயல்கிறேன்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. YouTube பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலர்..!

Result எதுவானாலும் கலங்க வேண்டாம்.. இது முடிவல்ல.. தேர்வு முடிவு நாளில் முதல்வர் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments