Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ..

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (09:27 IST)
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த ஆறுக்குட்டி எம்.ல்.ஏ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இரண்டாக பிளவுபட்ட அதிமுகவில் ஓபிஎஸ் பக்கம் இருந்தார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுகுட்டி. அவர் சமீபத்தில் ஓபிஎஸ் அணி தன்னை புறக்கணிப்பதாக கூறி அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில், அவர் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவித்த போது “எனது கவுண்டம்பாளையம் தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கு சட்டசபையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். அதனால் என்னை ஓ.பி.எஸ் அணி புறக்கணிக்க தொடங்கியது. அதனால் அந்த அணியிலிருந்து விலகினேன்.
 
தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிந்ததால் எடப்பாடி அணியில் இணைந்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments