Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலே வந்தாலும் பால் விநியோகம் பாதிக்காது! – முன்னேற்பாட்டுடன் ஆவின் மையங்கள்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:41 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் மக்களுக்கு அத்தியாவசியமான பால் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து ஆவின் பாலகங்களிலும் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் தயாராக உள்ளதாகவும், நகரின் சிக்கலான பகுதிகளில் நடமாடும் பாலகங்கள் மூலமாக பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments