Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திருக்குறள் ’இப்போது ’ நான்காம் பாலில் ’சேர்கிறது...நல்ல விசயம் தானே - கஸ்தூரி டுவீட்

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (20:57 IST)
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது  திருக்குறளோடு துவங்கும்  என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரையில் திருக்குறள் அச்சிடப்படும். அதற்காக முதல்வரிடம் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் அவர்  தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று ,அவர், பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் படமும் இடம்பெற பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து  பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், ’அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது  திருக்குறளோடு துவங்கும் .  டிவி , FM ரேடியோவில்  தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.
பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும் , ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான்  திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி  குறள் வருவது நல்ல விஷயம்தான் ’என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments