Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் இவர்கள்தானா..?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (19:56 IST)
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அவரது தொகுதியான திருவாரூர் காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
மேலும், உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அவர் ரசிகர் மன்றத்தினரும் விருப்பமனு வழங்கியுள்ளனர். ஆனால், ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தேர்தலுக்கு முதல் நாள்தான் சென்னை திரும்புகிறாராரம்.
 
அதேபோல், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 52 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க நாளை அதிமுக ஆட்சிக்குழு கூடுகிறது. 
இந்நிலையில் திமுக, அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக வட்டாரத்தில் திருவாரூரில் வலுவான வேட்பாளர் என்பதைத் தாண்டி அனுபவமிக்க வேட்பாளராக உள்ளவர் பூண்டி கலைவாணன். திருவாரூர் தொகுதியை முற்றும் அறிந்தவர், எனவே பூண்டி கலைவாணன்தான் திமுக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். 
 
அதிமுகவை பொறுத்தவரை திமுகவை தோற்கடிக்க பலமான வேட்பாளரை நிறுத்த உள்ளனராம். அப்படி பார்க்கையில், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைத்தியலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வைத்தியலிங்கம் பிரபலமானவர் என்பதால் வெல்ல வாய்ப்புள்ளது என அதிமுக தலைமை கணக்கு போடுகிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments