Publish Date: Thu, 25 Nov 2021 (11:04 IST)
Updated Date: Thu, 25 Nov 2021 (11:07 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசியல் கட்சிகளும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து நேற்று அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை குழு நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. நவம்பர் 26 முதல் 28 வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என்றும், விண்ணப்ப கட்டணங்கள் பேரூராட்சிக்கு 1,500, நகராட்சிகளுக்கு 2,500, மாநகராட்சிக்கு 5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.