Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வெற்றிபெற வாபஸ் வாங்கிய அதிமுகவினர் – கட்சியிலிருந்து நீக்கம்!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (09:01 IST)
திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற ஏதுவாக மனுவை வாபஸ் பெற்ற அதிமுக வேட்பாளர்களை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் சில பகுதிகளில் வேட்பாளர்கள் தங்களுக்குள் பேசி ஒருவரை தவிர்த்து மற்றவர்கள் மனுவை வாபஸ் வாங்கி கொள்ளும் சம்பவங்களும் நடந்தன. திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் சிலர் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் இவ்வாறாக மனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments