Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூந்தமல்லியை தூக்கி கொடுத்த அதிமுக! – அதிமுகவினர் சாலையில் ஆர்ப்பாட்டம்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (10:44 IST)
சென்னை பூந்தமல்லி தொகுதி கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாமக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை பூந்தமல்லி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பூந்தமல்லி தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நசரத்பேட்டை சாலையில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. நேற்று கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டதை கண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments