Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம்! – ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு!

Tamilnadu
Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (10:50 IST)
அதிமுக கட்சி தனது பொன்விழாவை கொண்டாட உள்ள நிலையில் தலைமை அலுவலகத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு முக்கியமான அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளது அஇஅதிமுக. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறும் பொன்விழாவை கொண்டாட அதிமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் பொன்விழாவை பிரம்மாண்டமான மாநாடு நடத்தி கொண்டாட கட்சி தலைமை திட்டமிட்டு வருகிறது. மேலும் பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments