Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (09:45 IST)
பாஜகவை தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தகவல். 

 
தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்திலேயே இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. கவர்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். 
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்டமாக செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதிய ஜனதா புறக்கணித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து தற்போது அதிமுகவும் நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது. 
 
 சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக, பாஜக புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments