Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு மறுநாளும் ஈரோடு ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்.. காரணம் இதுதான்..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (08:12 IST)
பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் வரை ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பது தெரிந்ததே. ஆனால் ஈரோடு நகரில் மட்டும் தீபாவளிக்கு மறுநாளும் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அதற்கு காரணம் ஒரு சில குறிப்பிட்ட கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் பாதி விலை என்ற சலுகை உட்பட சலுகை விலையில் ஏராளமான ஜவுளிகளை விற்பனை செய்வார்கள்.

 தீபாவளிக்கு வாங்கிய ஜவுளிகளில் விற்பனை செய்யாமல் மீதம் இருக்கும் ஜவுளிகளை தள்ளுபடி வெளியில் விற்பனை செய்வதால் தீபாவளிக்கு மறுநாளும் ஈரோடு நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மட்டும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில் இன்று காலையில் சலுகை அறிவிக்கப்பட்ட ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  குறிப்பாக ஆர்கேவி சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாள் ஈரோடு நகரில் 10க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளில் சலுகை விலையில் ஜவுளிகள் விற்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments