Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக்கை அடுத்து தெர்மோகோலுக்கும் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (08:49 IST)
வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் தெர்மோகோல் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வரும் 1ம் தேதி முதல் மாணவர்களின் செயல்வழி கற்றலுக்கு தெர்மாகோல் பயன்படுத்த கூடாது என்றும் அதேபோல் மாணவர்கள் மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வர கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பைகள், ஸ்ட்ரா, உணவு அருந்தும் மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பிளாஸ்டிக் இல்லா சூழலை கொண்டு வர வேண்டும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வ்ழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments