Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:10 IST)
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 33 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை என விழுப்புரம் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
 
மேலும் அவருக்கு ரூபாய் 33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய சொத்துக்களை அரசுடமையாக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments