Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (10:19 IST)
காவிரி விவகாரம் குறித்து கடந்த 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், கடந்த 2007ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். ஆளுங்கட்சி சார்பில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கி.வீரமணி திராவிடர் கழகம், எல்.கே.சுதீஷ் தேமுதிக உள்பட பல தலைவர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெறும் என்றும், கூட்டம் முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments