Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

Siva
சனி, 22 மார்ச் 2025 (08:03 IST)
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என சென்னை மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வெளியிட்ட செய்திக் குழுமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும், ஆதிதிராவிட, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், சனிக்கிழமை ஆன இன்று பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை பாடத்திட்ட அட்டவணையை பின்பற்றி வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

அடுத்த கட்டுரையில்
Show comments