Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் நல்லதுக்கு இல்லை: காங்கிரஸை எச்சரித்த திமுக!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (19:08 IST)
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியியிலும் சலசலப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. போதுமான இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவில்லை என இரு தரப்பிலும் இருந்து கூட்டணி கட்சிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் பெரும் அதிருப்தி அடைந்தன என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் ஊராட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு எதிராக இருந்ததாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிக்கையால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்று என்ற கருத்து நிலவியது 
 
இதனை அடுத்து கே.எஸ்.அழகிரியின் அறிக்கை குறித்து திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் கூறியதாவது: கே.எஸ்.அழகிரியின் வெளிப்படையான அறிக்கை நல்லதல்ல என்றும், எதைவைத்து அழகிரி அவர்கள் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டார் என தெரியவில்லை என்றும், அவர் கூறியுள்ளார். ஜெ. அன்பழகனின் இந்த கருத்தால் திமுக காங்கிரஸ் கட்சி இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments