Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மீனவர்களை கைது செய்த சிங்களப்படை: அன்புமணி கண்டனம்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (20:32 IST)
தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்த சிங்களப்படைக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
வங்கக்கடலில் கச்சத்தீவுக்கும்,  கோடியக்கரைக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை அவர்களின் விசைப்படகுடன் சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது!
 
கடந்த 10 நாட்களில்,  மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.  சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்!(
 
கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் படகுகளுடன் மீட்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும்  விரைந்து மீட்க வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments