Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வா? 12ஆம் வகுப்புத் தேர்வா? அன்புமணி கேள்வி!

நீட் விலக்கு
Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (11:03 IST)
நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. 
 
நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பதை விட இது மிகவும் மோசமான நிலையாகும். 12-ஆம் வகுப்புத் தேர்வா... நீட் தேர்வா... எதில் கவனம் செலுத்துவது என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டும். அது எந்தத் தேர்விலும் கவனம் செலுத்த விடாமல் செய்து விடக் கூடும். இந்தக் குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராமப்புற ஏழை மாணவர்கள் தான். நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments