Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற துளசிமதிக்கு அண்ணாமலை பாராட்டு!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (21:00 IST)
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி துளசிமதி முருகேசன்  தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு,  பாஜக  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
கால்நடை மருத்துவம் பயின்று கொண்டிருக்கும் சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் இந்த ஆண்டு ஆசியப் போட்டிகளில் பெற்றுள்ள இரண்டாவது பதக்கம் ஆகும். உலக அரங்கில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நம் அனைவரையும் பெருமைப்படுத்த வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments