Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிகையாளர்களை கதற வைத்த அண்ணாமலை: இனி யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (14:24 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது காரசாரமாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 குறிப்பாக முன்னணி ஊடகம் ஒன்றின் செய்தியாளர் ஒருவர் ஈஷா மையத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த கேள்விக்கு மடக்கிய அண்ணாமலை அடுத்தடுத்து அவரிடம் கேள்வி கேட்டபோது செய்தியாளர் திணறிய காட்சியை பார்க்க முடிந்தது.
 
அதேபோல் ரபேல் வாட்சில் உளவுபொருள் இருப்பதாக சந்தேகம் கேட்ட ஒரு செய்தியாளரிடம் வாட்சை கழட்டி கொடுத்து, இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மேலும் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் யூடியூப் சேனல்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் கூற மறுத்த அவர் இனிமேல் யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
 
 மேலும் ஒருசில பத்திரிகையாளர்களே யூடியூப் சேனல்களை அழைக்க வேண்டாம் என்றும் கூறினார்கள்.  மொத்தத்தில் இன்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கெல்லாம் எதிர் கேள்வி கேட்டு பத்திரிகையாளரை அண்ணாமலை கதற வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இந்தியாவுக்குள் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள்.. 95 குழந்தைகள் பிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500

அடுத்த கட்டுரையில்
Show comments