Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாமகவிடம் பேச ஏதுமில்லை - அண்ணாமலை

பாமகவிடம் பேச ஏதுமில்லை - அண்ணாமலை
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:01 IST)
பாமகவிடம் தேர்தல் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி. 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதியில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 15ம் தேதி முதலாக பெறப்பட்டு வருகின்றன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் முக்கியமான கட்சிகள் தங்களது அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இடையே கூச்சல், குழப்பம் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு எட்டப்படும். தனித்து போட்டி என்று அறிவித்துள்ள பாமகவிடம் தேர்தல் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!