Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்..!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (14:49 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர் எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் குடும்பத்தினர் குறித்த சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதனால்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இதனை அடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் ஆருத்ரா விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய நிலையில் இந்த  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
 
ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையெனில் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments