Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (14:26 IST)
தமிழகத்தில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இன்று பள்ளிப்பட்டு தாலுக்கா ராமா நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கங்கோத்ரி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளிப்பட்டு தாலுக்காவின் ராமா நாயுடு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தாமு. இவரது மனைவி ராகராஜேஸ்வரி. இவர் கொரோனாவால் கடந்தாண்டு உயிரிழந்தார்.

இவர்களுக்கு கங்கோத்ரி உள்ளிட்ட 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் கங்கோத்ரி, அங்குள்ள கீச்சலம் அரசினர் மேல் நிலைப்பள்ளீயில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.இவர் தாய் இறந்தபின் அதிகளவில் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி குடும்பத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது போலீஸார் மாணவியின் ட்ஹற்க்லை பற்றி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments