Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. வின் ரத்த மாதிரி எங்களிடம் இல்லை - அப்போலோ கை விரிப்பு

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:06 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
ஜெயலலிதாவின் மகள் தான் எனவும், இது தொடர்பாக டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
 
அந்நிலையில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்போலோ மருத்துவமனை வசம் இருக்கிறதா என்கிற கேள்வியை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். 
 
இந்நிலையில், ஜெ.வின் ரத்தமாதிரிகள் தங்களிடம் இல்லை என அப்போலோ நிர்வாகம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து வைத்து சேமிக்கும் அவசியம் ஏற்படவில்லை. எனவே, அவை எங்களிடம் இல்லை என அப்போலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதாவிற்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படியிருக்க, ஜெ.வின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என அப்போலோ நிர்வாகம் கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments