Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் பாதியில் படிப்பை நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!? – காரணம் இதுதானா?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (11:12 IST)
சமீபத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய வீடியோ ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவி ஒருவரிடம் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜகோபாலனை கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பழைய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் “பள்ளிக்கூடத்தில் கல்வி கட்டணம் கட்டவில்லை என்பதால் என் தந்தையை அவமதித்தார்கள். பீஸ் கட்ட முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் தெருக்களுக்கு உங்கள் பையனை அழைத்து சென்று பிச்சை எடுங்கள் என நிர்வாகம் சொன்னது” என பேசியுள்ளார்.

அவர் நேரடியாக அதில் பள்ளியின் பெயரை சொல்லாவிட்டாலும் கூட, ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் என்பதன் மூலம் அவர் அந்த பள்ளியையே குறிப்பிட்டுள்ளார் என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்