Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம்; மாணவர் மரணம்! – அரக்கோணத்தில் பரபரப்பு!

Tamilnadu
Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (10:36 IST)
பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பது சமீபகாலமாக சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில் அரக்கோணத்தில் படிக்கட்டில் பயணித்த மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிப்பது பெரும் விவாதமாகியுள்ளது. சில இடங்களில் மாணவர்கள் பேருந்து படிகட்டுகளில் நின்றபடி ஆபத்தான சாகசங்களை மேற்கொள்வது கண்டிக்கப்படும் நிலையில், சில இடங்களில் பேருந்தில் கூட்டம் காரணமாக மாணவர்கள் படிகளில் தொங்கி செல்லும் நிலையும் உள்ளது.

சமீபத்தில் இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் மாணவர்கள் படிகளில் நின்றபடி பயணிக்காமல் இருப்பதை பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அரக்கோணத்தில் பேருந்து படியில் தொங்கியபடி சென்ற தினேஷ்குமார் என்ற மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments