திருவள்ளூரில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:26 IST)
திருவள்ளூர் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரு வேறு அணிகளாக பிரிந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி நீண்ட போராட்டங்களுக்கு இடையே ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைந்தது முதலே இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகிறது. ஈபிஎஸ் அணியினர் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஓபிஎஸ்  அணியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
 
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் முன்னிலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டினர். மேலும் எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணீயினர் மீது குற்றம் சாட்டினர்,  பின்னர் அனைவரையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமாதான செய்து வைத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு ரூ.3000.. அப்புறம் ஒரு ரூ.5000.. இன்று புதுசா ரூ.2000.. வாரி வழங்கும் முதல்வர் ஸ்டாலின்..!

நாங்குநேரி இரட்டைக்கொலை!.. 6 பேர் கைது!.. போலீசார் தீவிர விசாரணை..

தூக்கத்திலிருந்து எழுந்து வாங்க முதல்வரே!.. நாங்கேரி சம்பவத்தில் பொங்கிய விஜய்!...

பனையூர் கட்சி தலைவர் பதற்றமடைந்தது ஏன்? குடும்ப உறுப்பினரை சமாதானம் செய்ய முயற்சியா?

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments