Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்வாக்கு அன்னபூரணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (11:27 IST)
அருள்வாக்கு அன்னபூரணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!
தன்னை தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டிருக்கும் அன்னபூரணி என்ற பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அருள்வாக்கு அன்னபூரணி என்பவரது புகைப்படம் மற்றும் செய்திகள் வைரல் ஆகி வருகின்றன. இவர் தன்னை தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்பதும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பொது மக்களுக்கு அருள்வாக்கு கூற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் காவல்துறையின் அனுமதி இன்றி அருள்வாக்கு கொடுக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக அருள்வாக்கு அன்னபூரணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்த நிலையில் அருள்வாக்கு அன்னபூரணி போலி சாமியார் என பலர் தங்களது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்