Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த நாட்டிற்கு எப்படி போகணும்: கிண்டலடித்த அஸ்வின்

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (11:34 IST)
நித்தியானந்தா அறிவித்த கைலாஷ் நாட்டிற்கு எப்படி போகவேண்டும்? எப்படி விசா எடுக்க வேண்டுமென கிரிக்கெட் வீரர் அஸ்வின் கிண்டலடித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், கைலாஷ் என்ற ஒரு தனிநாட்டை அறிவித்து அந்த நாட்டிற்கு பாஸ்போர்ட் விசா வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார் 
 
மேலும் இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் குடிமகனாக தகுதி உடையவர்கள் என்றும், ஏற்கனவே இந்த நாட்டில் 10 கோடி பேர் குடிமகனாக பதிவு செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாட்டின் பிரதமராக அவர் தன்னைத்தானே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கைலாஷ் நாட்டிற்கு எப்படி போகவேண்டும்? அந்த நாட்டிற்குப் போக எப்படி விசா எடுக்க வேண்டும்? என்று கிண்டலுடன் கூடிய டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்