Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னையில் இன்று நடைபெற இருந்த பி.எட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (07:04 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதை அடுத்து, இன்று, அதாவது அக்டோபர் 15ஆம் தேதி, சென்னையில் நடைபெற இருந்த பி.இட். கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெற இருந்த நிலையில், இந்த கலந்தாய்வு தேதியை மாற்றி, கல்லூரி கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த பி.இட். தேர்வு கனமழை காரணமாக அக்டோபர் 21ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டதாகவும், எனவே இன்று கலந்தாய்வு இல்லை என்பதை மனதில் கொண்டு மாணவர்கள் சென்னைக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments