Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.. காவல்துறை அறிவிப்பு..!

Autos
Mahendran
புதன், 12 பிப்ரவரி 2025 (15:52 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கடந்து செல்லும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் காரணமாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என்று தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும், காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து இயக்க அனுமதி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள், ஓட்டுனரின் பதிவு சான்றிதழை பரிசோதனை செய்து கொள்ளலாம். பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை இயக்கினால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்