Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா பரோல் மனு: சிறை நிர்வாகம் அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (00:11 IST)
அதிமுக அம்மா அணியில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை சரிசெய்ய வெளியே வரவிரும்பிய சசிகலா, பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார்.  சென்னையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ததார்.



 


ஆனால் இந்த மனுவை பரிசீலனை செய்த சிறை நிர்வாகம் ரத்த சொந்தங்களில் நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ள பரோல் வழங்கப்படும் என்றும் அண்ணன் மகன் திருமணத்திற்கு பரோலில் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறி அதிரடியாக பரோல் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஒரு நாள் பரோல் கேட்டிருந்தால் சிறை நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் ஆனால் மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கோரியிருந்ததால் பரோல் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  ஏற்கெனவே, சசிகலா தனது அக்கா மகன் மகாதேவன் மறைவை ஒட்டி இறுதி அஞ்சலி செலுத்த பரோல் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்