Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டம் போட்டு வெளிய அனுப்பிட்டாங்க : பொங்கும் மமதி சாரி

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (12:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் மமதி கருத்து தெரிவித்துள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் நெருங்கியுள்ள நிலையில் நேற்று மமதி வீட்டிலிருந்து வெளியேறினார். மற்றவர்களிடம் அவர் சரியாக உரையாடவில்லை என்று போட்டியாளர்களால் புகார் கூறப்பட்டது.
 
இந்நிலையிலிருந்து, ஒரு பிரபல வார இதழுக்கு மமதி அளித்த பேட்டியில் “பிக்பாஸ் போட்டியின் அடிப்படையே ஸ்டிராங்கான போட்டியாளரை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். நான் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணல? எந்த தவறும் செய்யல. யாருகிட்டயும் கோபமா கூட பேசல. யார் மனசும் புண்படியும் நடந்துக்கல. பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைப்பிடித்தேன். ஆனாலும், என்னை வெளியேற்றி விட்டனர்.
 
எனக்கு புகழ் வேண்டுமென்று அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. அதெல்லாம் நான் எப்போதே பார்த்துவிட்டேன். அதனால் எலிமினேட் ஆவது பற்றி ஆதங்கப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments