Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் நடந்த வினோத விபத்து: காயமின்றி உயிர் தப்பிய பிஞ்சுக்குழந்தை

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (12:01 IST)
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இருசக்கர வாகன விபத்து ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயம் அடைந்த நிலையில் அதே இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தை ஒன்று எவ்வித சிறுகாயமும் இன்றி தப்பித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற ஒரு இருசக்கர வாகனத்துடன் அவர்கள் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
 
ஆனால் இருசக்கர வாகனம் டிரைவர் இன்றி குழந்தையுடன் சுமார் 300 மீட்டர் பயணம் செய்து பின்னர் சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் அந்த வாகனத்தில் இருந்த குழந்தை அருகில் இருந்த புல்தரையில் தூக்கி வீசப்பட்டதால் அந்த குழந்தைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த ஆச்சரியமான சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments