Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பாஜக டம்மி; மறைமுகமாக சாடிய அதிமுக எம்பி

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (16:58 IST)
தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என்றும் அவர்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்றும் அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். பாஜக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் ஆர்.கே.நகரில் போட்டியிடும் மதுசூதனனை சந்தித்து பேசினார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் கூறியதாவது:-
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவால். ஆர்.கே.நகரில் அதிமுக வெற்றிப் பெற பாஜக உதவி தேவையில்லை. தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments