Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேல் ஊழல் பற்றிய புத்தகத்திற்கு தடை – எல்லை மீறுகிறதா காவல்துறை ?

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (16:53 IST)
ரபேல் ஊழல் பற்றிய புத்தகம் ஒன்றினை வெளியிட தடை விதித்து புத்தகங்களை அள்ளிச்சென்றுள்ளது தமிழகக் காவல்துறை.

ரஃபேல் ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்குப் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் கூட்டங்களில் எல்லாம் ரஃபேல் ஊழல் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஆனால் பாஜகவும் மோடியும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் எவ்விதமான விதிமுறை மீறலோ அல்லது ஊழலோ நடைபெறவில்லை என மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ் விஜயன் எழுதிய ’நாட்டை உலுக்கும் ரஃபேல் ஊழல்’ எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடக்க இருந்தது. ஆனால் சம்மந்தப்பட்ட புத்தகத்தை வெளியிட இருந்த பாரதி புத்தாகலய கடைக்கு சென்ற தமிழகக் காவல்துறையினர் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறக் கூடாது எனவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அள்ளிச்சென்றும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்த காரணம் கேட்கப்பட்டபோது ‘தேர்தல் நேரத்தில் இந்த புத்தகம் வெளியாவது விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல’ எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னராக மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நரேந்தர மோடி பி.எம். எனும் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments