Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுனர் இல்லாமல் தானாக ஓடிய பேருந்து.. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (16:12 IST)
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக பேருந்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீர் என தொழில் நுட்ப கோளாறு காரணமாக தானாக ஓடியது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இந்த பேருந்து நகர்ந்து சென்றதாகவும் அதன் பின்னர் எதிரே இருந்த சுவரின் மீது மோதி நின்றதாகவும் கூறப்படுகிறது. 
 
நல்ல வேலையாக பேருந்துக்குள் பயணிகள் யாரும் இல்லை என்றும் அதேபோல் பேருந்திம்ன் குறுக்கே யாரும் வராததால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
பேருந்தை நியூட்ரலில் வைத்துவிட்டு ஓட்டுனர் கீழே இறங்கி உள்ளதாகவும் ஓட்டுனர் இல்லாமல் பேருந்து நகர்ந்ததை பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய ராக்கெட் லாஞ்சர்கள்.. இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்த இஸ்ரேல்..!

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments