Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவினாசி அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட கார்: 5 பேர் பரிதாப பலி!

அவினாசி அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட கார்: 5 பேர் பரிதாப பலி!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (10:26 IST)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கோர விபத்து ஒன்று நடந்துள்ளது. அரசுப்பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் கார் தூக்கி வீசப்பட்டு காரில் இருந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.


 
 
ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்கார்ப்பியோ கார் ஒன்று அவினாசி அருகே தெக்களூர் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது. 6 வழிச்சாலையில் அரசுப்பேருந்து ஒன்று அந்த காரின் மீது மோதியதில் கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.
 
அரசு பேருந்து மோதிய வேகத்தில் பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்ததால் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காரை இடது புறமாக பேருந்து முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாகவும், காரின் ஓட்டுனர் படுகாயங்களுடன் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments