Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு !

Webdunia
புதன், 8 மே 2019 (10:59 IST)
மதுரை தொகுதி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யவேண்டுமென கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மதுரைத் தொகுதிப் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் நாளன்று சித்திரைத் திருவிழா இருப்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதைத் தேர்தல் ஆணையம் மறுக்க தேர்தல் நேரம் அதிகமாக்கப்பட்டது.

தேர்தல் முடிந்தபின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது துரை நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஆவார். அவரது மனுவில் ‘வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதனால் மதுரைத் தொகுதி தேர்தலை தடை செய்யவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments