Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு!

Webdunia
திங்கள், 22 மே 2023 (19:59 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சமீபத்தில் ஒரு நபர் கொலைமிரட்டல் விடுத்தார்.  இதுகுறித்து, அக்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் லல்லன் குமாரின் தொலைபேசிக்கு கடந்த மார்ச் 2 ஆம் ஒரு தேதி அழைப்பு வந்துள்ளது.

அதை எடுத்துப் பேசியபோது, ராகுல் காந்திக்குக் கொலைமிரட்டல் விடுத்த நபர் எதிர்முனையில் பேசியுள்ளார். பின்னர், ’’தான் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வசிப்பதாகவும், தன் பெயர் மனோஜ்’’ என்று கூறியதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக, லல்லன் குமார், லக்னோவில் உள்ள சின்ஹத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments